Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி

ADDED : நவ 21, 2019 02:16 PM


Google News
Latest Tamil News
பறக்கும் எம் கிள்ளைகாள் பாடும் எம் பூவைகாள்

அறக்கண் என்னத்தகும் அடிகள் ஆரூரரை

மறக்க கில்லாமையும் வளைகள் நில்லாமையும்

உறக்கம் இல்லாமையும் உணர்த்த வல்லீர்களே.

(சுந்தரர் பாடிய தேவாரம்)

பொருள்: பறக்கும் கிளிகளே! பாடும் நாகணவாய் என்னும் பெயர் கொண்ட பறவைகளே! எனக்கு தர்மத்தின் ஊற்றுக்கண்ணாக விளங்கும் திருவாரூர் தியாகேசப் பெருமான் மீது ஆசை. அவரை மறக்க முடியாததால் உடல் மெலிந்தேன். என் வளையல்கள் கழன்று விழுகின்றன. துாக்கமின்றி தவிக்கும் என் நிலையை அவருக்கு எடுத்துச் சொல்லுங்கள்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us