Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கதைகள்/வேலையை! ரசித்து செய்

வேலையை! ரசித்து செய்

வேலையை! ரசித்து செய்

வேலையை! ரசித்து செய்

ADDED : மார் 17, 2017 01:59 PM


Google News
ஒரு தாயும் மகனும் மட்டும் வசித்த வீடு அது. ஏழைக்குடும்பம்... வீட்டுத் தலைவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இப்போது, தாய்க்கும் உடல்நிலை சரியில்லை. மரணத்தருவாயில் இருந்த தாயிடம், “அம்மா நீயும் என்னைவிட்டுப் போய்விடாதே. நீயும் போய்விட்டால், நான் அனாதையாகி விடுவேனே!” என அவளது கைகளைப் பிடித்து அழுதான், அவளது பதினாறு வயது மகன்.

தாய் சொன்னாள், “மகனே! எந்தச் சூழ்நிலையிலும் கலக்கம் கூடாது. ஜப்பானிலுள்ள ஹிரோஷிமாவும், நாகசாகியும் எத்தனை அனாதைகளை உருவாக்கியது தெரியுமா? அவர்களெல்லாம் வாழாமலா போய்விட்டார்கள்? ஒன்றை மட்டும் புரிந்து கொள். உன் தந்தை அடிக்கடி என்னிடம் ஒரு

விஷயத்தைச் சொல்வார். அதையே உனக்கு சொல்கிறேன்,” என்ற தாயிடம், அந்த துயரமான சூழ்நிலையையும் மறந்து, அவள் சொல்வதைக் கேட்க ஆர்வமானான் மகன்.

“மகனே! நீ ஒரு கலைஞனாகி விடு. பிழைத்துக் கொள்வாய். அதற்காக, பெரிய கலைஞன் ஆக வேண்டும் என சொல்லவில்லை. உனக்கு கழிவறை சுத்தம் செய்யும் பணி கிடைத்தால் கூட, அதையும் பாக்கியமாகக் கருதி ரசித்து செய். நீ சுத்தம் செய்வது போல் வேறு யாரும் அதை சுத்தம் செய்ய முடியாதபடி இருக்க வேண்டும். உன் வேலையில் ஒரு தனித்துவம் வெளிப்பட வேண்டும்,” என்றாள்.

ஆம்...உங்கள் வேலையை ரசித்து செய்யுங்கள். ரசித்து செய்யும் வேலையில் தான் சுகமும், திருப்தியும் இருக்கிறது.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us