Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பாரதியார்/கோயில் ஒரு பள்ளிக்கூடம்

கோயில் ஒரு பள்ளிக்கூடம்

கோயில் ஒரு பள்ளிக்கூடம்

கோயில் ஒரு பள்ளிக்கூடம்

ADDED : ஜூலை 19, 2013 10:07 AM


Google News
Latest Tamil News
* மக்கள் அனைவரும் ஒன்றுகூடி கடவுளை வணங்கினால், மனித மனங்களில் ஒற்றுமை உண்டாகும். இதற்காகவே நம் முன்னோர் கோயிலைக் கட்டி வைத்தனர்.

* ஊர் ஒற்றுமை கோயிலால் நிறைவேறுவது போல, வீட்டு ஒற்றுமை நிலைக்கவே வீட்டிலும் வழிபாட்டை நடத்துகிறோம்.

* மிருகநிலையில் இருக்கும் மனிதனை தெய்வ நிலைக்கு கொண்டு சேர்க்கும் பள்ளிக்கூடங்களே கோயில்கள்.

* பலவீனமான உயிர்களுக்கு மனிதன் அநியாயம் செய்யும் வரை இந்த உலகில் கலியுகம் இருக்கும். அநியாயம் அழிந்தால் கலியும் காணாமல் போகும்.

* மற்றவர்களைப் போல அநியாயம் செய்தால் தவறில்லை என்று எண்ணி நாமும் அநியாயத்தின் வழியில் செல்லக்கூடாது.

* தர்மவழியில் நடப்பவனுக்கு நன்மைக்கான பலன் கைமேல் கிடைக்கும். இதில் சந்தேகம் வேண்டாம்.

* கோயிலுக்குப் போனாலும் சரி, போகாவிட்டாலும் சரி, பிறரை ஏமாற்றுவதை நிறுத்தினாலே தெய்வம் அருள்புரியும்.

- பாரதியார்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us