Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பாரதியார்/அறிவே வலிமை தரும்

அறிவே வலிமை தரும்

அறிவே வலிமை தரும்

அறிவே வலிமை தரும்

ADDED : டிச 11, 2012 09:12 AM


Google News
Latest Tamil News
* 'நான்' என்ற உணர்ச்சி நீங்கும் போது, மனிதன் எல்லையற்ற தெய்வத்தோடு பொருந்தும் தகுதியைப் பெறுகிறான்.

* ஒன்றே பரம்பொருள். உயிர்கள் அனைத்தும் அதன் வடிவங்கள்.

* நெஞ்சில் ஈரமில்லாவிட்டால் ஈசனைக் காண முடியாது. பகைவனுக்கும் நல்லதை நினைக்கும் அருள்நெஞ்சினராக இருக்க வேண்டும்.

* எங்கும் எப்போதும் அச்சமில்லாததும், உண்மையை அறிந்து கொள்வதுமான அறிவே நல்லறிவு. கடவுளிடம் நல்லறிவை வேண்டுவோம்.

* அறிவின் வலிமையே வலிமை. அறிவில் உயர்ந்தவர்கள் மற்றவர்களை இழிவாக நினைப்பது கூடாது.

* மனமும், இந்திரியங்களும், உடம்பும் அறிவுக்கு அடங்கி நடந்தால் வாழ்வு நலம் பெறும். இல்லாவிட்டால் கெடுதி உண்டாகும்.

* ஓயாமல் தொழில் செய்து கொண்டிரு. நீ எது செய்தாலும் அது நல்லதாகவே முடியும்.

* ஒன்றை அடக்கும் முன்பாக அதன் இயல்புகளையெல்லாம் அறிந்து கொள்ள வேண்டும். நன்றாக அறியப்படாததை நம்மால் வசப்படுத்த முடியாது.

- பாரதியார்

( இன்று பாரதியார் பிறந்த தினம்)




      Our Apps Available On




      Dinamalar

      Follow us