Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பாரதியார்/கடவுள் மட்டுமே உண்மை

கடவுள் மட்டுமே உண்மை

கடவுள் மட்டுமே உண்மை

கடவுள் மட்டுமே உண்மை

ADDED : டிச 04, 2012 04:12 PM


Google News
Latest Tamil News
* அச்சம், கவலை, சிறுமை, திகைப்பு, சோர்வு ஆகியவை மனிதனுக்குள் இருக்கும் அசுரர்கள். இவர்களுக்கு எல்லாம் தலைவன் அஞ்ஞானம்.

* சீறிவரும் பாம்பைக் கண்டு அஞ்சாமல் சிரிக்கின்ற வீரரே, கடவுளின் கருணையை பெற்றவர்.

* அஞ்ஞானம் ஒரு விஷப்பூச்சி. அதற்குக் கைகால் கிடையாது. நெளிந்து நெளிந்து நமக்குள்ளே புகுந்து ஒளியையும் இன்பத்தையும் மறைத்து விடுகிறது.

* அஞ்ஞானத்திற்கு விருத்திராசுரன் என்று பெயர். விருத்திரன் என்றால் இருள். அவனே தெய்வ இன்பங்களில் இருந்து நம்மைப் பிரித்து வைக்கும் உணர்ச்சி.

* மதிப்புடன் வாழ்ந்தவனுக்கு ஏற்படும் அபகீர்த்தி (களங்கம்) மரணத்தைக் காட்டிலும் கொடியது.

* சிறு வயதில் ஏற்படும் அபிப்ராயங்கள் மிகவும் வலிமை மிக்கவை. அசைக்க முடியாததாகவும், மறக்க முடியாததாகவும் இருக்கும்.

* கடவுள் என்ற ஒன்றே மெய்ப்பொருள். உலக உயிர்கள் அனைத்தும் அவரது வடிவம்.

- பாரதியார்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us