Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பைபிள்/சுறுசுறுப்பே அரும்பொருள்

சுறுசுறுப்பே அரும்பொருள்

சுறுசுறுப்பே அரும்பொருள்

சுறுசுறுப்பே அரும்பொருள்

ADDED : ஜூலை 03, 2012 09:07 AM


Google News
Latest Tamil News
* கடவுள் நமக்கு அச்சம் நிறைந்த ஜீவனைக் கொடுக்கவில்லை. சக்தியும் அன்பும், மன அமைதியும் உள்ள ஜீவனைத் தான் கொடுத்திருக்கிறார்.

* கடவுளே எனக்குத் துணை. மனிதன் எனக்கு என்ன செய்வானென்று அஞ்ச மாட்டேன் என்று நான் தைரியமாய்ச் சொல்லலாமே.

* நீ பரிபக்குவமான மனிதனையும் நேர்மையாளனையும் கவனித்துப் பார். அவனுடைய முடிவு அமைதியானதாயிருக்கும்.

* அமைதியை உண்டாக்குபவர்கள் பாக்கியவான்கள். ஏனெனில் அவர்கள் தெய்வ மக்கள் என்று அழைக்க பெறுவார்கள்.

* என் வார்த்தைகளுக்குச் செவி சாய்ப்பவன் எவனோ அவன் பத்திரமாய் வாழ்வான். தீமையைப் பற்றிய பயமின்றி அமைதியாக இருப்பான்.

* சுறுசுறுப்பே மனிதனின் அரும்பொருள்.

* பெண்கள் மிதமான ஆடைகள் அணியட்டும். நாணமிகுந்த முகத்துடனும், விரித்த தலையோடு விளங்காமலும், விலையுயர்ந்த ஆடைகளையோ விரும்பாமலும் இருக்கட்டும்.

- பைபிள் பொன்மொழிகள்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us