Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பைபிள்/கடவுளே வழிநடத்துபவர்

கடவுளே வழிநடத்துபவர்

கடவுளே வழிநடத்துபவர்

கடவுளே வழிநடத்துபவர்

ADDED : ஜூன் 15, 2010 12:06 PM


Google News
Latest Tamil News
* நேர்மையாளனின் பாதை மேன்மேலும் உயர்ந்து கொண்டே போகும். தீயவர்களின் பாதையோ காரிருள் போன்றது. எதில் இடறி விழுகிறோம் என்பது அவர்களுக்கே தெரிவதில்லை.

* தன் வழியை உணர்வதே அறிவுள்ளவனின் ஞானமாகும். ஆனால் முட்டாள்களின் புத்தியீனமோ ஏமாற்றமே.

* வாக்குறுதி கொடுத்து அதைக் கொண்டு செலுத்தாமல் இருப்பதை விட, வாக்குறுதி செய்யாமல் இருப்பதே சிறந்தது.

* உற்சாகத்துடன் கடவுளுக்குத் தொண்டு செய்யுங்கள். பாடிக் கொண்டே அவர் சன்னதிக்கு வாருங்கள்.

* குருடனுக்குக் குருடன் வழிகாட்டினால் இருவரும் குழியில் தான் விழுவார்கள்.

* மனிதனின் இருதயம் அவனுடைய வழியை வகுக்கும். ஆனால், அவனது காலடிகளை வழிநடத்துபவர் கடவுளே.

* ஒன்றுமில்லாதவன் தன்னை ஏதோவென்று நினைத்துக் கொள்வானாகில் அவன் தன்னைத் தானே வஞ்சித்துக் கொள்கிறான்.

* நீ விருந்து செய்யும்போது ஏழைகளையும், ஊனர்களையும், முடவர்களையும், குருடர்களையும் கூப்பிடுவாயாக.

- பைபிள் பொன்மொழிகள்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us