Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/காஞ்சி பெரியவர்/ஜென்மம் முழுக்க படியுங்கள்

ஜென்மம் முழுக்க படியுங்கள்

ஜென்மம் முழுக்க படியுங்கள்

ஜென்மம் முழுக்க படியுங்கள்

ADDED : பிப் 12, 2011 11:02 PM


Google News
Latest Tamil News
* சமூகப்பணியையும், தெய்வப்பணியையும் சேர்த்து செய்ய வேண்டும். ஒன்றை விட்டு ஒன்றைச் செய்வது சரியல்ல. தெய்வத்தின் ஒப்புதலுடன் தான் தேசப்பணியைச்

செய்ய வேண்டும்.

* நம்முடைய சாஸ்திரங்கள், புராணங்கள் தாய் மொழியிலும் சமஸ்கிருதத்திலும் இருப்பதற்குக் குறைவே இல்லை. அவற்றில்

ஒரு ருசியை ஏற்படுத்திக் கொண்டால், நாளெல்லாம் படித்தாலும் போதாமல், ஜென்மம் முழுவதும் படித்துக் கொண்டு சந்தோஷமாக இருக்கலாம்.

* ஒரு கணவன் கற்க வேண்டியதைக் கற்று முடிந்தவுடன், உலகத்தில் தர்மங்களை செய்ய பத்தினி என்ற துணையை சேர்த்துக் கொள்ள வேண்டும். அவளுடன் இணைந்து

நற்பணிகளைத் தொடர வேண்டும்.

* பூர்வ ஜென்மங்களில் வினையை விதைக்கிறோம், அதற்கு இறைவன் தருகிற பலனை, கஷ்டத்தை

இப்போது அறுவடை செய்கிறோம்.

* பிறருக்கு உதவி செய்வதற்காக சொந்த விஷயத்தில்

சிக்கனமாய் இருக்க வேண்டும் என்ற உயர்ந்த

கொள்கையை கடைபிடித்தால் புண்ணியத்துக்குப்

புண்ணியமும், நிம்மதியும் கிடைக்கிறது.

- காஞ்சிப்பெரியவர்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us