Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/காஞ்சி பெரியவர்/பலன் தருவது அவனே!

பலன் தருவது அவனே!

பலன் தருவது அவனே!

பலன் தருவது அவனே!

ADDED : பிப் 04, 2011 12:02 AM


Google News
Latest Tamil News
* சத்தியம் என்றால் வாக்கும், மனசும்

ஒன்றுபடுவது மட்டுமல்ல. நல்ல மனசிலே தோன்றுகிற நல்ல எண்ணங்களை வாக்கில் சொல்வதே சத்தியம். நல்ல விளைவுகளை உண்டாக்குவதே சத்தியம்.

* இறைவனை நினைத்துச் செய்யும்

எந்தக் காரியத்துக்கும் பயன் உண்டு.

அறியாமல் செய்தால் கூட அதற்கும் பயன் உண்டு.

* நாம் நிலையாக நிற்க வேண்டுமானால் அசையாத

ஒன்றைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்கிறோம்.

அதேபோல் மனம் தியானத்தில் நிலைத்து நிற்க

வேண்டுமானால், அசையாத மரக்கட்டை போன்ற

பரம்பொருளை நினைத்துக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும்.

* ஒவ்வொரு மனிதனிலும் ஈஸ்வரன் தான் குடி

இருக்கிறார். ஒருவரை நமஸ்கரிக்கும் போது அந்த

ஈஸ்வரனையே வழிபடுவதாகத் தான் அர்த்தம்.

* பாவ சிந்தனைகளைப் போக்கிக் கொள்ளப் புண்ணியமான நினைப்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

* நீ தர்மங்களைச் செய்தால் பலன் எதிர்பார்க்காமல் செய்ய வேண்டும். பலன் கொடுக்க வேண்டியது

ஈஸ்வரன் வேலையாகும்.

- காஞ்சிப்பெரியவர்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us