Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/காஞ்சி பெரியவர்/நடப்பது இறைவன் செயல்

நடப்பது இறைவன் செயல்

நடப்பது இறைவன் செயல்

நடப்பது இறைவன் செயல்

ADDED : டிச 08, 2010 01:12 AM


Google News
Latest Tamil News
* ஒருவருக்கு ஆனந்தத்தை தரும் சம்பவம் மற்றொருவருக்கு துக்கத்தை தருகிறது. எது நடக்க வேண்டுமோ அது இறைவன் செயல் என்று நினைப்பதே சரியாகும்.

* உடல், வாய், மனம், பணம் என்னும் நான்கு வகைகளிலும் பாவம் செய்கிறோம்.  பாவத்திற்கு பிராயச்சித்தமாக அந்த

நான்காலும் புண்ணியம் செய்ய வேண்டும். உடலால் பரோபகாரம், வாயால் தெய்வ நாமத்தைச் சொல்வது,

மனதால் தியானம், பணத்தால் தர்மம் முதலியவை செய்ய வேண்டும்.

* சம்பாதிப்பதாலும், வேண்டாத பொருட்களை தேடிப்போவதாலும் காலவிரயம் ஏற்படுகிறது. இதனால்

ஆத்மசாந்தி குலைகிறது. நாம் உயிர்வாழ இந்த பொருள் அவசியம்தானா என கணக்கு பார்த்து செலவழிப்பதே உண்மையில் கணக்காயிருப்பதாகும்.

* குடிமக்கள் செய்யும் பாவம் அரசனையும், மனைவி செய்யும் பாவம் கணவனையும், சிஷ்யனின் பாவம்

குருவையும் அடையும்.

* ஆசையின்றி ஒரு செயலைச் செய்தால் பாவமில்லை. ஆசைப்பட்டு செய்வது தான் பாவம். நமக்காக

இல்லாமல் பிறருக்காக செய்யும் செயலே உயர்ந்தது.

 -காஞ்சிப்பெரியவர்  





      Our Apps Available On




      Dinamalar

      Follow us