Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/கிருபானந்த வாரியார்/மகிழ்ச்சிக்கு...

மகிழ்ச்சிக்கு...

மகிழ்ச்சிக்கு...

மகிழ்ச்சிக்கு...

ADDED : மார் 08, 2024 02:03 PM


Google News
Latest Tamil News
* நல்லவர்களின் நட்பு மகிழ்ச்சியையும், கெட்டவரின் நட்பு துன்பத்தையும் தரும்.

* புத்தகத்தால் வரும் அறிவை விட அனுபவத்தால் கிடைக்கும் அறிவு மேலானது.

* எளிமையாக வாழ்வதே வலிமையான வாழ்வு. இதனால் நிம்மதியாக வாழலாம்.

* நிதி இருந்தால் நீதி, மனம் இருந்தால் மானம், தனம் இருந்தால் தானம் இருப்பது அவசியம்.

* மரண வேதனை கொடுமையானது. அதை பக்தியால் தடுக்க முடியும்.

* உடலை வளர்க்க உணவு அவசியம். உயிரை வளர்க்க வழிபாடு அவசியம்.

* நல்லவர்களின் கோபம் கையிலுள்ள மோதிரம் கழற்றுவதற்குள் மறைந்து விடும்.

* நியாயமற்ற வழியில் வரும் பணத்தை கையால் தொடாதே.

* ஆடம்பரம், அலட்சியம் வேண்டாம்.

* எந்தச் செயலில் ஈடுபட்டாலும் அது பிறருக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும்.

* நண்பர், உறவினர் கைவிடலாம். ஆனால் நீ செய்த தர்மம் கைவிடாது.

* மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை என்னும் சங்கிலிகளால் மனிதன் கட்டப்பட்டிருக்கிறான்.

வாரியார்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us