Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/குரான்/கணக்கு கேட்பான் இறைவன்

கணக்கு கேட்பான் இறைவன்

கணக்கு கேட்பான் இறைவன்

கணக்கு கேட்பான் இறைவன்

ADDED : டிச 20, 2011 09:12 AM


Google News
Latest Tamil News
* எந்த ஒரு சமூகமும் தன் பண்புகளை மாற்றிக் கொள்ளாத வரை உண்மையில் இறைவனும் அச்சமூகத்தின் நிலையை மாற்றுவதில்லை.

* உறவினர்க்கு அவருடைய உரிமையை வழங்கிவிடு. மேலும், வறியவருக்கும், பயணிக்கும் வழங்கிவிடுங்கள்.

* தனிமனிதனின் உரிமைகளை பறிக்கக் கூடாது. சமுதாயத்தின் தேவைகளைப் புறக்கணிக்கக் கூடாது. இவ்விரண்டிற்குமிடையில் இணக்கமும் நடுநிலையும் வேண்டும்.

* படைப்புகள் அனைத்தும் இறைவனின் குடும்பமாகும். படைப்புகளுக்கு நன்மை புரிபவரே இறைநேசத்திற்கு உரியவராவர்.

* மண்ணிலுள்ள மனிதர்களை நீங்கள் நேசித்தால் விண்ணிலுள்ள இறைவன் உங்களை நேசிப்பான்.

* அன்பு என்பது உங்கள் உறவினர்கள் மீது மட்டும் செலுத்தப்படுவதல்ல, அன்பு அனைவர் மீதும் செலுத்தப் படுவதாகும்.

* உங்கள் உள்ளங்களில் உள்ளவற்றை நீங்கள் வெளிப்படுத்தினாலும் அல்லது மறைத்து வைத்தாலும் எந்நிலையிலும் இறைவன் உங்களிடம் அவை பற்றிக் கணக்கு கேட்பான்.

-வேதவரிகளும் தூதர் மொழிகளும் நூலில் இருந்து





      Our Apps Available On




      Dinamalar

      Follow us