Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/குரான்/உண்மையாய் நடந்தால் உயர்வு

உண்மையாய் நடந்தால் உயர்வு

உண்மையாய் நடந்தால் உயர்வு

உண்மையாய் நடந்தால் உயர்வு

ADDED : ஆக 26, 2012 09:08 AM


Google News
Latest Tamil News
* உங்கள் சொற்படி நடக்கும் ஊழியர்களுக்கு நீங்கள் உண்பதையே கொடுங்கள். நீங்கள் உடுத்துவதையே அவர்களையும் உடுத்தச் செய்யுங்கள். நீங்கள் மகிழும்படி நடக்காத ஊழியர்களை விலக்கி விடுங்கள். அவர்களைத் துன்புறுத்த வேண்டாம்.

* வேலைக்காரன் உங்களுக்கு உணவு கொண்டு வந்தால் நீங்கள் உணவு உண்ண அமரும் போது, அவனையும் அமர்த்திக் கொண்டு அவனுக்கும் கொடுத்து உண்ணுங்கள்.

* கைத்தொழிலும், மோசடி இல்லாத வியாபாரமும் தூய்மையான சம்பாத்தியமாகும்.

* வியாபாரத்தில் உண்மை சொன்னால் அபிவிருத்தி ஏற்படும். பொய் சொன்னால் வியாபாரம் குறையும்.

* தேவையான பொருள் உதவி செய்து விதவைகளையும், ஏழைகளையும் வாழ்விப்பவன் இறைநெறியில் ஒரு பெருங்கொடையாளியைப் போலவும், இரவு முழுவதும் தொழுபவனைப் போலவும், எப்போதும் நோன்பு வைப்பவனைப் போலவும் இருக்கின்றான்.

- நபிகள் நாயகம்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us