Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/ஸ்ரீ அரவிந்தர்/உன்னை நீயே ஆய்வு செய்!

உன்னை நீயே ஆய்வு செய்!

உன்னை நீயே ஆய்வு செய்!

உன்னை நீயே ஆய்வு செய்!

ADDED : ஏப் 19, 2011 10:04 AM


Google News
Latest Tamil News
* செய்யும் செயல்களை எல்லாம் கடவுளுக்கு செய்யும் செயல்களாகக் கருதி செயல்படுபவர்களின் மனம் கோயில். அங்கு எப்போதும் அமைதியும் மகிழ்ச்சியும் நிலைத்திருக்கும்.

* ஆற்றலைப் பெற வேண்டுமானால், மனதில் எப்போதும் ஆற்றலைப் பற்றிய எண்ணமே இருக்க வேண்டும். எண்ணத்தாலும், சொல்லாலும், செயலாலும் ஆற்றல் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்க வேண்டும்.

* உன்னை நீயே இரக்கமின்றி ஆய்ந்து பார்ப்பாயாக. உன் தவறுகள் கண்ணுக்குப் புலப்படும். அப்போது நீ பிறரிடம் பரிவோடும், இரக்கத்தோடும் நடந்து கொள்வாய்.

* தனிமையை விரும்புவது அறிவைத் தேடுவதற்கான அறிகுறி. ஆனால், கூட்டத்தின் மத்தியிலும், போர்க்

களத்திலும், கடை வீதியிலும் தொடர்ந்து தனிமையை விட்டு விலகாமல் இருக்கவும் கற்றுக் கொள்ளவேண்டும்.

* துன்பம் நம்மைத் தகுதி உடையவராக மாற்றுகிறது. வேதனையே வலிமையின் கதவுகளைத் திறக்கும்

திறவுகோல்.

- அரவிந்தர்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us