Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/ஸ்ரீ அரவிந்தர்/எண்ணம் தூய்மை ஆகட்டும்

எண்ணம் தூய்மை ஆகட்டும்

எண்ணம் தூய்மை ஆகட்டும்

எண்ணம் தூய்மை ஆகட்டும்

ADDED : டிச 04, 2010 01:12 AM


Google News
Latest Tamil News
* ஆன்மிகப் பொருளுடைய கனவு ஒன்றைக் கண்டால் அது அனுபவம். அதன் பொருளை உணர்ந்தால் ஞானம்.

* ஆண்டவனின் அருளாட்சியில் தீமை

என்பது இல்லை. நலத்தையோ அல்லது நலத்தை உண்டாகுகின்ற முயற்சியையோ நாம் செயகிறோம்.

* அனைத்து காலங்களிலும் மனிதன் ஓர் அறிவிலியாகத் தோன்றுகின்றான். இதுதான் தெய்வத்துக்கும்

மனிதனுக்கும் உள்ள வேறுபாடாகும்.

* கடவுளை நாம் அறிய வேண்டுமானால்  அகந்தையையும், அஞ்ஞானத்தையும் அறவே ஒழித்துவிட வேண்டும்.

* வாழ்க்கை நடத்த கருத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். அதனுடைய தளைகளைக் கொண்டு உங்களது

ஆன்மாவைச் சிறைப்படுத்தி விடக்கூடாது.

* எண்ணத்தில் உண்மையும், சொல்லில் நேர்மையும் மிகவும் அவசியமாகும். பொய் சொல்வது நமது இயல்பு அல்ல. அது வெளியிலிருந்தே வந்ததாகும் என்பதை உணர்ந்தால் அதை விலக்கி விட முடியும்.

- அரவிந்தர்

(இன்று அரவிந்தர் நினைவு தினம்) 





      Our Apps Available On




      Dinamalar

      Follow us