ADDED : மே 09, 2013 03:05 PM

* நாட்டில் நல்லாட்சி நடைபெற வேண்டும். கருணையில்லாதவர், கொடியவர்களும் மக்களை ஆளக்கூடாது.
* பசி, நோய், கொடிய தவம் இவற்றால் உடலை பலவீனப்படுத்தக் கூடாது. கிடைப்பதற்கு அரிதான இந்த உடலைப் பேணி பாதுகாக்க வேண்டும்.
* பிறருடைய பசியையும், துன்பத்தையும் அகற்றுவது ஒருவருடைய கடமை ஆகும்.
* கடவுள் கற்பனைக்கு எல்லாம் அப்பாற்பட்டவர். அவரை நம் கற்பனைக்குள் கட்டுப்படுத்த முடியாது.
* ஒழுக்கத்திற்கு ஜீவகாருண்யமே அடிப்படை. கருணை இல்லாவிட்டால் ஒழுக்கம் இல்லை.
* யார் நமக்கு துன்பம் இழைத்தாலும், அஞ்சாமல் வாழ வேண்டும்.
* பிறர் தயவை நாடி ஒருபோதும் பிச்சை எடுத்து வாழ்வது கூடாது. அதே சமயம், நம் தயவை நாடி வருவோருக்கு மறுக்காமல் கொடுத்து உதவ வேண்டும்.
* நல்லவரைக் கெட்டவராகவும், கெட்டவரை நல்லவராகவும் திரித்துக் கூறுவது உலக மக்களின் இயல்பு.
- வள்ளலார்
* பசி, நோய், கொடிய தவம் இவற்றால் உடலை பலவீனப்படுத்தக் கூடாது. கிடைப்பதற்கு அரிதான இந்த உடலைப் பேணி பாதுகாக்க வேண்டும்.
* பிறருடைய பசியையும், துன்பத்தையும் அகற்றுவது ஒருவருடைய கடமை ஆகும்.
* கடவுள் கற்பனைக்கு எல்லாம் அப்பாற்பட்டவர். அவரை நம் கற்பனைக்குள் கட்டுப்படுத்த முடியாது.
* ஒழுக்கத்திற்கு ஜீவகாருண்யமே அடிப்படை. கருணை இல்லாவிட்டால் ஒழுக்கம் இல்லை.
* யார் நமக்கு துன்பம் இழைத்தாலும், அஞ்சாமல் வாழ வேண்டும்.
* பிறர் தயவை நாடி ஒருபோதும் பிச்சை எடுத்து வாழ்வது கூடாது. அதே சமயம், நம் தயவை நாடி வருவோருக்கு மறுக்காமல் கொடுத்து உதவ வேண்டும்.
* நல்லவரைக் கெட்டவராகவும், கெட்டவரை நல்லவராகவும் திரித்துக் கூறுவது உலக மக்களின் இயல்பு.
- வள்ளலார்