Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/வள்ளலார்/மாமிச உணவு வேண்டாமே!

மாமிச உணவு வேண்டாமே!

மாமிச உணவு வேண்டாமே!

மாமிச உணவு வேண்டாமே!

ADDED : ஜூன் 13, 2011 11:06 AM


Google News
Latest Tamil News
* படுக்கும் போது இடதுகை பக்கமாக படுப்பதுடன், நான்கு மணி நேரம் தூங்க வேண்டும். அதன்பின் விழித்துக் கொண்டு நல்ல சிந்தனையுடன் செயலாற்ற வேண்டும்.

* உணவில் மாமிசம் சேர்த்துக் கொள்ளாததுடன், எப்படிப்பட்ட உணவாக இருந்தாலும் சிறிது குறைத்தே, பசிக்கும் போது மட்டும் சாப்பிட வேண்டும்.

* வேற்று நாட்டினரிடத்தும், வேற்று மதத்தினரிடத்தும் மட்டுமின்றி உயிரினங்கள் அனைத்தின் மீதும் அன்பு கொள்ள வேண்டும்.

* மனிதனாகப் பிறந்தவன், மற்றவர்களுக்கு உதவும் மனம் உடையவனாக இருக்க வேண்டும். பிறர்படும் துயரை கண்டும் காணாது இருப்பவன் எதற்கும் உதவாதவன்.

* பசித் துன்பம் ஏற்பட்டால் அறிவு அழிந்து அழிவு ஏற்படும். பசிப்பவர்க்கு தக்க உதவி செய்வது அனைவரின் கடமை.

* பொய், புறங்கூறுவது போன்ற செயல்களால் முன்னேறலாம் என நினைக்கக் கூடாது. அது ஒரு நாள் மிகப்பெரிய அழிவில் கொண்டு போய் விட்டுவிடும்.

* ஓர் உயிரைக் கொன்று மற்றோர் உயிரின் பசியை போக்குவது கடவுள் அருளுக்கு ஏற்புடையதல்ல.

- வள்ளலார்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us