Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/விவேகானந்தர்/பொறுப்பவர் பூமியாள்வார்

பொறுப்பவர் பூமியாள்வார்

பொறுப்பவர் பூமியாள்வார்

பொறுப்பவர் பூமியாள்வார்

ADDED : ஜூன் 13, 2011 09:06 AM


Google News
Latest Tamil News
*எப்போதும் இனிமையோடும், புன்னகையோடும் இருப்பது ஒருவனைக் கடவுள் அருகில் கொண்டு செல்லும்.

* மனித வடிவம் கொண்ட ஒவ்வொரு உயிரினையும் வழிபடுங்கள், இறைவனை அனைத்து வடிவத்திலும் வழிபடுவதே நன்மை பெற நல்ல வழி.

* இறைவனின் படைப்பான அனைத்து உயிர்களுக்கும் இரக்கத்துடன் பணி செய்தல் மிக நன்று.

* பூமிதேவியைப் போன்று அனைத்தையும் பொறுப்பவர் ஆக இருக்க வேண்டும். பொறுமையோடு இருந்தால், உலகமே உங்கள் காலடியில் அமரும்.

* கீழ்ப்படிதலை அறிபவனே கட்டளையிடவும் அறிவான்.

* ஒன்றாகக் கூடி வாழ்தலே நமக்கு வேண்டிய ஒன்றாகும். சேர்ந்து வாழ்தலே சிறந்த வலிமை.

* ரகசியமாகப் பிறரைக் குறை கூறுவது பாவம். முதலில் நீ அதை முழுவதும் நீக்க வேண்டும். மன்னித்து மறந்தால் மகிழ்ச்சி நிலவும்.

* அன்பு, நேர்மை, பொறுமை ஆகியவற்றைத் தவிர வேறொன்றுமே நமக்குத் தேவையில்லை.

- விவேகானந்தர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us