Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/விவேகானந்தர்/மறந்தால் மகிழ்ச்சி வரும்

மறந்தால் மகிழ்ச்சி வரும்

மறந்தால் மகிழ்ச்சி வரும்

மறந்தால் மகிழ்ச்சி வரும்

ADDED : ஜூன் 20, 2011 01:06 PM


Google News
Latest Tamil News
* மனித வடிவம் கொண்ட ஒவ்வொரு உயிரையும் வழிபடுங்கள். பகவானை அனைத்து வடிவத்திலும் வழிபடுவதே நன்மை பெற நல்ல வழி.

* இரக்கத்தால் மனிதனுக்கு மட்டுமல்ல, அனைத்து உயிர்களுக்கும் பணி செய்தல் நன்மை தரும்.

* பொறுமை தான் அனைத்து பணிகளையும் செய்து முடித்து வெற்றி பெற ஆணிவேராக இருக்கும். பொறுமையுடன் உற்சாகத்தையும் கூட்டிவிட்டால், வெற்றியின் எல்லைக்கு விளிம்பே கிடையாது.

* கீழ்ப்படிதலை அறிபவனே கட்டளையிடவும் அறிவான். முதலில் கீழ்ப்படியக் கற்றுக் கொள், ஒன்றாகக் கூடி வாழ்தலே நமக்கு வேண்டிய ஒன்றாகும். சேர்ந்து வாழ்தலே சிறந்த வலிமை. கீழ்ப்படிவதே அதன் ரகசியம்.

* விருப்பங்களுக்கும், கோபத்திற்கும் அடிமையாய் இருப்பவனால், உண்மையான சுதந்திரத்தின் இன்பத்தை உணர முடியாது.

* எந்தச்சூழலிலும் இனிமையோடும், புன்னகையோடும் இருப்பது ஒருவனைக் கடவுள் அருகில் கொண்டு செல்லும்.

* ரகசியமாகப் பிறரைக் குறை கூறுவது பாவம். முதலில் நீ அதை முழுவதும் நீக்க வேண்டும், மன்னித்து மறந்தால் மகிழ்ச்சி நிலவும்.

- விவேகானந்தர்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us