Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/விவேகானந்தர்/உண்மையான மகிழ்ச்சி

உண்மையான மகிழ்ச்சி

உண்மையான மகிழ்ச்சி

உண்மையான மகிழ்ச்சி

ADDED : அக் 11, 2010 07:10 PM


Google News
Latest Tamil News
* உங்கள் தவறுகளைப் பெரும்பேறாக

நினையுங்கள். அவை நம்மை அறியாமலே நமக்கு வழிகாட்டும் தெய்வங்கள் என்றால் மிகையில்லை.

* அழுகை பலவீனத்தின் அறிகுறி. அடிமைத்தனத்தின் அறிகுறி. தோல்விகள் இல்லாத வாழ்க்கையால் பயனேதும் இல்லை. போராட்டம் இல்லாத வாழ்க்கை சுவையாக இருக்காது.

* தன்னலத்தை ஒழிப்பதில் தான் உண்மையான மகிழ்ச்சி இருக்கிறது. உன்னைத் தவிர யாராலும் உன்னை

மகிழ்விக்க முடியாது.

* கோபப்படும் மனிதனால் அதிக அளவோ அல்லது

செய்யும் பணியைச் சிறப்பாகவோ செய்ய முடியாமல் போய் விடும். ஆனால், அமைதியானவனோ சிறப்பாகப் பணியாற்றுவான்.

* மன்னிக்கக் கூடியதும், சமநோக்குடையதும், நிலை

தடுமாறாததுமான மனதை எவன் பெற்றிருக்கிறானோ அவனே ஆழ்ந்த அமைதியில் திளைத்திருப்பான்.

* கருணை என்பது சொர்க்கத்தைப் போன்றது. நாம்

அனைவரும் கருணையுள்ளவர்களாக மாறி

சொர்க்கத்தில் மகிழ்ந்திருப்போம்.

விவேகானந்தர்

 





      Our Apps Available On




      Dinamalar

      Follow us