ருக்மணி வசந்த் உடன் பேச்சுவார்த்தை நடத்தும் சிம்பு படக்குழு
ADDED : 23 days ago
நடிகர் சிம்பு தற்போது அரசன் படத்தில் நடித்து வருகிறார். இதை முடித்த பிறகு ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் தனது 51வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பை ஜூன் மாதத்தில் தொடங்க திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே இதில் நாயகியாக நடிக்க மிருணாள் தாக்கூர் உடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், மிருணாள் தாக்கூர் தரப்பில் எந்தவொரு பதிலும் சரியாக வரவில்லை. இதையடுத்து சாய் பல்லவியை அணுகலாம் என நினைத்தபோது அவர், தனுஷ் 55வது படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகிவிட்டார். தற்போது மதராஸி, காந்தாரா 2 படங்களில் நடித்த ருக்மணி வசந்த் உடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.