ரிஷப் ஷெட்டியின் 'காந்தாரா சாப்டர்- 1' படத்தின் மற்றொரு சாதனை!
2025ம் ஆண்டின் இந்தியத் திரைப்படங்களில் அதிக வசூல் செய்த படங்களில் ஒன்றான 'காந்தாரா: சாப்டர்-1', 850 கோடி வசூலித்தது. அதையடுத்து தற்போது அப்படம் ஒரு புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. இந்த சாதனையை அடுத்தடுத்து வேறு எந்தப் படமும் அவ்வளவு எளிதில் முறியடிக்க முடியாது என்று கருதப்படுகிறது.
இப்படத்துக்காக அஜனீஷ் லோக்நாத் இசையில் உருவான 'பிரம்மலக்சா' என்ற பாடல், ஒரு மில்லியன் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் கடந்து சாதனை படைத்த முதல் கன்னட படப் பாடல் என்ற மைல்கல்லை எட்டியுள்ளது. இப்பாடல் மக்களால் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு இந்த வரலாற்றுச் சாதனையை செய்துள்ளது. படம் வெளியாகி ஒரு வருடத்தைக் கடந்த பின்னரும், தொடர்ந்து பல சாதனைகளைப் படைத்து வருகிறது. இது உண்மையிலேயே ஒரு குறிப்பிடத்தக்க சாதனை ஆகும்.
இந்த ஆன்மிகம் கலந்த அதிரடி படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி, கதாநாயகனாகவும் நடித்திருந்தார். காந்தாரா படத்தின் முன்கதையாக உருவான இந்த படத்தில் ருக்மிணி வசந்த் எதிர்மறைக் கதாபாத்திரத்தில் நடித்தார். இந்நிலையில் தற்போது காந்தாரா -3 (காந்தாரா சாப்டர் 2) படத்திற்கான முதல்கட்ட பணிகள் நடந்து வருவதாகவும், விரைவில் அதன் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.