உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / திருப்பதியில் தலைமுடி காணிக்கை செலுத்திய வெங்கி அட்லூரி

திருப்பதியில் தலைமுடி காணிக்கை செலுத்திய வெங்கி அட்லூரி

தெலுங்கு திரை உலகை குறிப்பிடத்தக்க இயக்குனராக வலம் வரும் இயக்குனர் வெங்கி அட்லூரி, ஏற்கனவே தனுஷை வைத்து 'வாத்தி', துல்கர் சல்மானை வைத்து 'லக்கி பாஸ்கர்' உள்ளிட்ட படங்களை இயக்கியதன் மூலம் தமிழ் ரசிகர்களிடமும் பிரபலமானவர். தற்போது சூர்யா நடிப்பில் இவர் இயக்கியுள்ள 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' தெலுங்கு மற்றும் தமிழில் வெளியாகியுள்ளது.

இந்தப் படத்திற்கு தற்போது ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்து வருகிறது. அதே சமயம் படம் ரிலீஸ் ஆவதற்கு முதல் நாளே அவர் திருப்பதிக்கு சென்று தலைமுடி காணிக்கை செலுத்தி, ஏழுமலையானை தரிசித்து வேண்டுதலை நிறைவேற்றியுள்ளார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது சோஷியல் மீடியாவில் வெளியாகியுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !