Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பெங்களூரு மாநகராட்சிக்கு ரூ.750 கோடி நிதி

பெங்களூரு மாநகராட்சிக்கு ரூ.750 கோடி நிதி

பெங்களூரு மாநகராட்சிக்கு ரூ.750 கோடி நிதி

பெங்களூரு மாநகராட்சிக்கு ரூ.750 கோடி நிதி

ADDED : ஜூலை 13, 2024 05:18 AM


Google News
பெங்களூரு : பெங்களூரு மாநகராட்சி சார்பில் நகரில் சாலை அமைப்பது, மேம்பாலங்கள் கட்டுவது, சாக்கடை கால்வாய் அமைப்பது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் சிறப்பு உள்கட்டமைப்புக்கான மூலதன ஆதரவு என்ற திட்டத்தின் கீழ், சாலை அமைப்பது, மேம்பாலங்கள் கட்டுவது உள்ளிட்ட பணிக்காக இந்த நிதியாண்டில் 3,000 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது.

நிதி ஒதுக்க கோரி, கர்நாடக அரசின் நகர வளர்ச்சித் துறைக்கு, மாநகராட்சி கோரிக்கை விடுத்திருந்தது. தற்போது 750 கோடி ரூபாயை அரசு ஒதுக்கி உள்ளது. வரும் நாட்களில் மீதமுள்ள தொகையும் ஒதுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் பெங்களூரு மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சி பணிகளை, ஒப்பந்தம் எடுத்து செய்த ஒப்பந்ததாரர்கள், தங்களுக்குரிய நிலுவை பில் தொகையை விடுவிக்க வேண்டும் என்று, மாநகராட்சியிடம கோரிக்கை வைத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us