/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மங்களூரு - பெங்களூரு இடையிலான தனியார் பஸ் கட்டணம் 'கிடுகிடு' உயர்வு மங்களூரு - பெங்களூரு இடையிலான தனியார் பஸ் கட்டணம் 'கிடுகிடு' உயர்வு
மங்களூரு - பெங்களூரு இடையிலான தனியார் பஸ் கட்டணம் 'கிடுகிடு' உயர்வு
மங்களூரு - பெங்களூரு இடையிலான தனியார் பஸ் கட்டணம் 'கிடுகிடு' உயர்வு
மங்களூரு - பெங்களூரு இடையிலான தனியார் பஸ் கட்டணம் 'கிடுகிடு' உயர்வு
ADDED : ஜூலை 30, 2024 07:30 AM
பெங்களூரு: கடலோர மாவட்டத்தில் கன மழை பெய்ததால் மண் சரிவு ஏற்பட்டு, பாதைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் பெங்களூரு - மங்களூரு பாதையில், ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்தும், தனியார் பஸ் உரிமையாளர்கள், கட்டணத்தை இரட்டிப்பாக வசூலித்தனர்.
கர்நாடகாவில் கடலோர மாவட்டமான தட்சிண கன்னடாவில், இரண்டு மாதங்களாக பரவலாக மழை பெய்கிறது. உத்தரகன்னடா, சிக்கமகளூரு, ஹாசன் உட்பட பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்ததில், ஆங்காங்கே மண் சரிவு ஏற்பட்டுள்ளது.
தண்டவாளங்கள் மீது மண் சரிந்துள்ளது. எனவே பல்வேறு பாதைகளில், 14 ரயில்களின் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
வரப்பிரசாதம்
இதில் பெங்களூரு - மங்களூரு இடையிலான ரயிலும் ஒன்றாகும். ரயில்கள் இயங்காதது, தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. பயண கட்டணத்தை இரட்டிப்பாக உயர்த்தி உள்ளனர். சில பஸ்களில், கட்டணம் மூன்று மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு பெங்களூரில் இருந்து, மங்களூருக்கு பயணம் செய்ய 500 முதல் 600 ரூபாய் வரை கட்டணம் இருந்தது. தற்போது இவ்விரு நகரங்களுக்கு இடையே பயணம் செய்ய 1,000 முதல் 1,200 ரூபாய் வரை வசூலிக்கின்றனர்.
ஏ.சி., பஸ் டிக்கெட் கட்டணம் 2,000 ரூபாயில் இருந்து, 4,000 ரூபாய் வரை இஷ்டம்போல் வசூலிக்கப்படுகிறது.
குக்கே சுப்ரமண்யா, தர்மஸ்தலா கோவில்களுக்கு செல்லும் பக்தர்களுக்கு சுமை ஏற்படுகிறது. மங்களூரு - பெங்களூரு இடையே, இயக்கப்படும் தனியார் பஸ்களின் பயண கட்டணம் அதிகரிப்பது, இது முதன் முறை அல்ல. பண்டிகைகள், தொடர் விடுமுறை நாட்களில் அதிகரிப்பது வழக்கம்.
பயணியர் வலியுறுத்தல்
தனியார் பஸ் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி பயணியர் வலியுறுத்துகின்றனர். அரசு எச்சரித்தும் தனியார் பஸ் உரிமையாளர்கள் பொருட்படுத்தவில்லை.
தனியார் பஸ் கட்டணம் மட்டுமல்ல, பெங்களூரு - மங்களூரு இடையே இயக்கப்படும் விமான கட்டணமும் உயர்ந்துள்ளது. வழக்கமான நாட்களில், விமான பயண கட்டணம் 3,000 முதல் 4,000 ரூபாய் வரை இருக்கும். இப்போது திடீரென, 10,000 ரூபாயாக அதிகரித்துள்ளது. நேற்று இயங்கிய விமானங்களில் 7,500 ரூபாய் முதல் 16,000 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்பட்டது.