தொடரும் பருவமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு!
தொடரும் பருவமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு!
தொடரும் பருவமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு!

மக்களுக்கு எச்சரிக்கை
அணையின் பாதுகாப்பு கருதி உபரி நீரை வெளியேற்ற, காவிரி நீர்ப்பாசன கார்ப்பரேஷன் முடிவு செய்துள்ளது. எந்த நேரத்திலும் அணையில் இருந்து தண்ணீர், காவிரி ஆற்றில் திறந்து விட வாய்ப்புள்ளது.
தீவானது கோவில்
தட்சிணகன்னடா மாவட்டத்தில், பரவலாக மழை பெய்வதால, நேத்ராவதி, குமாராதாரா ஆறுகளில், வெள்ளம் அபாய கட்டத்தை தாண்டி பாய்கிறது. பானி மங்களூரு உட்பட தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டனர். இந்த மாவட்டத்தில் ஒரே வாரத்தில், வழக்கத்தை விட 29 செ.மீ., மழை அதிகமாக பெய்துள்ளது.
போக்குவரத்து நிறுத்தம்
ஷிராடிகாட்டில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால், மங்களூரு - பெங்களூரு நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மடிகேரி, மைசூரு வழியாக மாற்று பாதையில் வாகனங்கள் செல்கின்றன. மடிகேரி, சம்பாஜி இடையே கர்தோஜி என்ற இடத்தில், மண் சரிவு ஏற்படும் அறிகுறிகள் தென்படுவதால், ஜூலை 18 முதல் 22 வரை இரவு 8:00 மணி முதல், காலை 6:00 மணி வரை, போக்குவரத்தை தடை செய்து, குடகு மாவட்ட கலெக்டர் வெங்கட் ராஜா உத்தரவிட்டுள்ளார்.