ரேணுகாசாமி கொலை நடந்த 'ஷெட்' உரிமையாளருக்கு சிக்கல்
ரேணுகாசாமி கொலை நடந்த 'ஷெட்' உரிமையாளருக்கு சிக்கல்
ரேணுகாசாமி கொலை நடந்த 'ஷெட்' உரிமையாளருக்கு சிக்கல்
ADDED : ஜூன் 23, 2024 06:42 AM
ரேணுகாசாமி கொலை நடந்த ஷெட் உரிமையாளர் ஜெயண்ணா. இவரிடம் ரேணுகாசாமி கொலை தொடர்பாக போலீசார் விசாரித்தனர். முதலில் தனக்கு எதுவும் தெரியாது என கூறியிருந்தார்.
கொலை நடந்த பின்னர், ஜெயண்ணா ஷெட்டுக்கு வந்ததும், கொலை குறித்து யாரிடமும் கூறக்கூடாது என, ஷெட் ஊழியர்களிடம் கூறிவிட்டு சென்றதும் போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதனால் அவரை விசாரணைக்கு ஆஜராகுமாறு, போலீசார் மீண்டும் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். இதற்கிடையில், கொலை வழக்கில் தர்ஷன் கைது செய்யப்பட்டதும், அவரது மனைவி விஜயலட்சுமி, மகன் வினித் குறித்து, சமூக வலைதளங்களில் சிலர் கருத்து பதிவிட்டனர். இதையடுத்து சமூக வலைதள பக்கங்களை விஜயலட்சுமி முடக்கினார்.
தர்ஷன் குடும்ப உறுப்பினர்களை பற்றி, ஊடகத்தினர் செய்தி வெளியிட, நீதிமன்றத்தில் இருந்து விஜயலட்சுமி தடை வாங்கி உள்ளார்.
கடவுள் புத்தி கொடுக்கட்டும்!
எனது மகன் ஆபாச குறுந்தகவல் அனுப்பியது பற்றி போலீசில் புகார் செய்திருக்கலாம். ஆனால் அவரை கடத்திச் சென்று கொடூரமாக கொலை செய்துள்ளனர். ஊடகங்கள் வெளியிடும் செய்தியை பார்க்கும்போது, என் மகனை கொலை செய்தவர்களிடம் மனிதத் தன்மை இல்லை என்று தெரிகிறது. எனது மகன் அணிந்திருந்த நகைகளை, போலீசார் மீட்டுக் கொடுத்துள்ளனர். இந்த வழக்கில் அரசு, முதல்வர் நேர்மையாக செயல்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. எனது மகனை கொன்றவர்களுக்கு கடவுள் நல்ல புத்தி கொடுக்கட்டும்.
காசிநாத், ரேணுகாசாமியின் தந்தை
- நமது நிருபர் -