வரப்போகுது ஜம்மு காஷ்மீர் தேர்தல்: அப்துல்லா, மெகபூபாவுக்கு வேலை வந்தாச்சு
வரப்போகுது ஜம்மு காஷ்மீர் தேர்தல்: அப்துல்லா, மெகபூபாவுக்கு வேலை வந்தாச்சு
வரப்போகுது ஜம்மு காஷ்மீர் தேர்தல்: அப்துல்லா, மெகபூபாவுக்கு வேலை வந்தாச்சு
ADDED : ஆக 03, 2024 11:13 AM

ஸ்ரீநகர்: ஜம்மு- காஷ்மீரில் தேர்தல் நடத்துவதற்காக, தலைமைத் தேர்தல் கமிஷனர் ராஜிவ் குமார் மற்றும் தேர்தல் கமிஷனர்கள் ஞானேஷ்குமார், எஸ்.எஸ். சந்து ஆகியோர் வரும் ஆகஸ்ட் 8ம் தேதி முதல் 10ம் தேதி வரை அம்மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனர்.
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 சட்டப்பிரிவு கடந்த 2019-ம் ஆண்டு ஆக.05ம் தேதி நீக்கப்பட்டது. இதையடுத்து மாநிலம் இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. கடந்த மாதம் கார்கில் சென்றிருந்த பிரதமர் மோடி ஜம்மு-காஷ்மீருக்கு சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெறும் என உறுதியளித்தார்.
செப்டம்பர் 30க்குள்..!
இந்நிலையில், தலைமைத் தேர்தல் கமிஷனர் ராஜீவ் குமார் மற்றும் தேர்தல் கமிஷனர்கள் ஞானேஷ்குமார், எஸ்.எஸ். சந்து ஆகியோர் வரும் ஆகஸ்ட் 8ம் தேதி முதல் 10ம் தேதி வரை ஸ்ரீநகர் சென்று, உள்ளூர் அதிகாரிகளை சந்தித்து தேர்தல் நடத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளார்.
ஆகஸ்ட் 10ம் தேதி ஜம்முவில் செய்தியாளர்களை தேர்தல் கமிஷனர்கள் சந்திக்க உள்ளனர். செப்டம்பர் 30ம் தேதிக்குள் சட்டசபை தேர்தல் நடத்தி முடிக்க தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளது.