வெளியுறவு செயலராக விக்ரம் மிஸ்ரி பொறுப்பேற்பு
வெளியுறவு செயலராக விக்ரம் மிஸ்ரி பொறுப்பேற்பு
வெளியுறவு செயலராக விக்ரம் மிஸ்ரி பொறுப்பேற்பு
ADDED : ஜூலை 16, 2024 12:54 AM

புதுடில்லி: வெளியுறவுத்துறை செயலராக பதவி வகித்த வினய் குவாத்ராவின் பதவிக்காலம் நேற்று முன்தினம் நிறைவடைந்தது.
அந்த பதவிக்கு, தேசிய பாதுகாப்பு உதவி ஆலோசகராக இருந்த விக்ரம் மிஸ்ரியை நியமிக்க, மத்திய அமைச்சரவையின் நியமன குழு ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, அவர் வெளியுறவுத் துறை செயலராக நேற்று பொறுப்பேற்றார். இவர், சீனாவுக்கான துாதராக கடந்த 2019 - 21ல் பதவி வகித்தார்.
அப்போது, சீன எல்லையை ஒட்டியுள்ள கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதலால் இரு நாடுகளுக்கு இடையே பதற்றமான சூழல் நிலவியது. இந்த பிரச்னைக்கு சுமுக தீர்வு காண, இரு தரப்புக்கும் இடையே பேச்சு நடத்தியதில் விக்ரம் மிஸ்ரியின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது.
முன்னாள் பிரதமர்கள் குஜ்ரால், மன்மோகன் சிங் மற்றும் தற்போது பிரதமராக உள்ள நரேந்திர மோடி ஆகியோருக்கு, தனிச்செயலராகவும் இவர் பணியாற்றி உள்ளார்.