Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ தெருவில் திரிந்த 20 பசுக்கள் அல்வா, பூரி தின்றதால் பலி

தெருவில் திரிந்த 20 பசுக்கள் அல்வா, பூரி தின்றதால் பலி

தெருவில் திரிந்த 20 பசுக்கள் அல்வா, பூரி தின்றதால் பலி

தெருவில் திரிந்த 20 பசுக்கள் அல்வா, பூரி தின்றதால் பலி

ADDED : செப் 24, 2025 07:19 AM


Google News
Latest Tamil News
ஹிசார் : ஹரியானாவில், தெருவில் சுற்றித்திரிந்த 20 பசுக்கள் திடீரென இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த விசாரணையில் அல்வா, பூரி போன்ற ஜீரணிக்க முடியாத உணவை தின்று பசுக்கள் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

ஹரியானாவின் ஹிசாரில், 'கோ சேவா ஹெல்ப் லைன் சமிதி' என்ற தன்னார்வ அமைப்பு செயல்படுகிறது. தெருக்களில் சுற்றித்திரியும் பசுக்களை மீட்டு பராமரிக்கும் பணியில், இந்த அமைப்பு ஈடுபடுகிறது. இந்நிலையில், கடந்த மூன்று நாட்களில் இங்குள்ள தெருக்களில் சுற்றித்திரிந்த, 20க்கும் மேற்பட்ட பசுக்கள் பலியாகியுள்ளதாக, இந்த அமைப்பின் நிறுவனரும், இயக்குநருமான சீதா ராம் சிங்கால் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது:

ஹிசாரில் தினமும் சராசரியாக இரண்டு தெரு பசுக்கள் இறக்கின்றன. இது இயற்கையாகவோ, நோய் பாதிப்பு காரணமாகவோ, விபத்தினாலோ பலியாகின்றன. நகரில் பல்வேறு பகுதிகளில் கடந்த மூன்று நாட்களில் மட்டும் 20 பசுக்கள் இறந்துள்ளன. இவை பெரும்பாலும் மக்கள் தரும் அல்வா, பூரி, வறுத்த தின்பண்டங்கள் போன்ற உணவுகளை தின்று, அதனால் அமிலத்தன்மை அதிகரித்து இறக்கின்றன.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us