சர்ச்சை சாம்பிட்ரோடாவுக்கு மீண்டும் அதே பதவி வழங்கியது காங்.,
சர்ச்சை சாம்பிட்ரோடாவுக்கு மீண்டும் அதே பதவி வழங்கியது காங்.,
சர்ச்சை சாம்பிட்ரோடாவுக்கு மீண்டும் அதே பதவி வழங்கியது காங்.,
ADDED : ஜூன் 26, 2024 08:16 PM

புதுடில்லி: சர்ச்சை பேச்சில் சிக்கிய காங். மூத்த தலைவரும், அயலக அணி பொறுப்பாளரான சாம்பிட்ரோடா மீண்டும் கட்சியில் இணைத்துக்கொள்ளப்பட்டு, அதே பொறுப்பு வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் அயலக அணி பொறுப்பாளரான சாம் பிட்ரோடா ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு பேட்டி அளித்தார். அதில் 'இந்தியாவில் சீனர்கள், அரேபியர், ஆப்ரிக்கர்கள் என பலதரப்பட்ட தோற்றம் கொண்டவர்கள் வாழும் தேசத்தை நாம் மகிழ்ச்சியாக வைத்திருக்க முடியும் என பேசினார்.
இவரது பேச்சு சர்ச்சையை கிளப்பியது. பல்வேறு கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். பார்லிமென்ட் தேர்தல் நேரம் என்பதால் காங்.கிற்கு பின்னடைவை உண்டக்கும் வா்க்கு வங்கியையும் பாதிக்கும் என்பதாலும் காங்கிரஸ் வெளிநாட்டு அணி பொறுப்பாளர் பதவியிலிருந்துகடந்த மாதம் சாம்பிட்ரோடா அதிரடியாக நீக்கப்பட்டார்.
இந்நிலையில் இன்று மீண்டும் வெளிநாட்டு அணி பொறுப்பாளர் பதவியில் சாம்பிட்ரோடா நியமிக்கப்பட்டதாக காங். மேலிடம் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.