தமிழக மக்களின் இதயத்தில் காசி வாழ்கிறது: கவர்னர் ரவி
தமிழக மக்களின் இதயத்தில் காசி வாழ்கிறது: கவர்னர் ரவி
தமிழக மக்களின் இதயத்தில் காசி வாழ்கிறது: கவர்னர் ரவி

முக்கிய நோக்கம்
விழாவில் கவர்னர் ரவி பேசியதாவது: காசி தமிழ் சங்கமம் விழாவிற்கு தமிழகத்தில் இருந்து வந்தவர்களை வரவேற்கிறேன். காசி மற்றும் தமிழகத்துக்கு இடையேயான இணைப்பு பல ஆண்டுகள் பழமையானது. சுமார் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ராஜேந்திர சோழன், கங்கை நீரை கங்கை கொண்ட சோழபுரத்துக்கு கொண்டு சென்றார். சிறந்த புரட்சியாளர் விடுதலை போராட்ட வீரர் மகாகவி சுப்ரமணிய பாரதி காசியில் படித்தார். இது நமக்கு தெரியும். காசி தமிழக மக்களின் இதயத்தில் வாழ்கிறது. காரணம், காசி சிவனின் முக்கியமான ஸ்தலம்.
நாகரிக உறவு
இந்த விழாவில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியதாவது: இன்று காசி தமிழ் சங்கமத்தின் நான்காவது பதிப்பை துவக்கி வைக்க நாம் அனைவரும் இங்கு வந்துள்ளோம். இந்த நிகழ்ச்சியின் கருப்பொருளாக தமிழ் கற்றுக்கொள்ளுங்கள் என்பதாகும். குறுகிய அரசியல் நலன்கள் காரணமாக தமிழகத்தை சேர்ந்த ஒரு சில நண்பர்கள், மொழியின் அடிப்படையில் பிரிவினையை உருவாக்க விரும்புகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும், காசி தமிழ் சங்கமம் துவக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும்படி முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதினேன்.
தமிழ் படிக்கின்றனர்
மத்திய அமைச்சர் எல். முருகன் பேசியதாவது: இந்தாண்டின் கருப்பொருளாக தமிழ் கற்கலாம் என்பதாகும். தமிழக ஆசிரியர்கள் இங்கு வந்து, இங்கு பல்வேறு பள்ளிகளில் தமிழ் கற்பிக்கின்றனர். இங்குள்ள மாணவர்களும் தமிழகம் சென்று தமிழ் படிக்கின்றனர். இது மிகப்பெரிய கலாசார பரிமாற்றம் ஆகும். இந்த ஆண்டு காசி தமிழ் சங்கமம் தமிழகத்துக்கும் வாரணாசிக்கும் இடையிலானது மட்டுமல்ல. இங்கு இருந்து மக்களை ராமேஸ்வரம் அழைத்து செல்ல உள்ளோம்.


