Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/சிக்கிம் ராணுவ முகாம் அருகே நிலச்சரிவு: வீரர்கள் 3 பேர் பலி; 6 பேர் மாயம்

சிக்கிம் ராணுவ முகாம் அருகே நிலச்சரிவு: வீரர்கள் 3 பேர் பலி; 6 பேர் மாயம்

சிக்கிம் ராணுவ முகாம் அருகே நிலச்சரிவு: வீரர்கள் 3 பேர் பலி; 6 பேர் மாயம்

சிக்கிம் ராணுவ முகாம் அருகே நிலச்சரிவு: வீரர்கள் 3 பேர் பலி; 6 பேர் மாயம்

ADDED : ஜூன் 02, 2025 01:56 PM


Google News
Latest Tamil News
சாட்டன்: சிக்கிம் ராணுவ முகாம் அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 3 வீரர்கள் உயிரிழந்தனர். மேலும், 6 வீரர்களை காணவில்லை. அவர்களை தேடி வருகின்றனர்.

கடந்த சில தினங்களாக வடகிழக்கு மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. ஏராளமான கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. சுமார் 5,000க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், வடக்கு சிக்கிமில் உள்ள சாட்டன் எனும் பகுதியில் இந்திய ராணுவ முகாம் அமைந்துள்ளது. நேற்று மாலை அங்கு பெய்த கனமழை காரணமாக, பெரும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அதில், சிக்கி 3 வீரர்கள் உயிரிழந்தனர். மேலும், 6 ராணுவ வீரர்களை காணவில்லை. அவர்களை தேடி வருகின்றனர்.

இது குறித்து ராணுவம் தரப்பில் கூறியதாவது; இதுவரையில் நிலச்சரிவில் சிக்கிய 3 ராணுவ வீரர்களின் உடல் எடுக்கப்பட்டுள்ளது. சிறு காயங்களுடன் 4 வீரர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். சாவாலான வானிலையிலும், மாயமான 6 ராணுவ வீரர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது, என தெரிவிக்கப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us