Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ டில்லி வந்த பராகுவே அதிபர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு

ADDED : ஜூன் 02, 2025 01:33 PM


Google News
Latest Tamil News
புதுடில்லி: 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் சான்டியாகோ பெனா பலாசியோஸ், பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, இருநாடுகளின் உறவு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

முதல்முறையாக இந்தியா வந்துள்ள அவரை மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் மல்த்ரா நேரில் சென்று வரவேற்றார். அவருக்கு பாலம் விமானப்படை தளத்தில் பாரம்பரிய முறைப்படி வீரர்களின் அணிவகுப்பு மரியாதை கொடுக்கப்பட்டது.

இது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ரந்திர் ஜெய்ஸ்வால் விடுத்துள்ள எக்ஸ் தளப்பதிவில், 'பராகுவே அதிபர் பலாசியோஸின் இந்தப் பயணம் இருநாடுகளின் உறவை பலப்படுத்தும் விதமாக அமையும்,' எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், டில்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை பராகுவே அதிபர் பலாசியோஸ் சந்தித்து பேசினார். முன்னதாக, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரையும் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இந்த சந்திப்பின் போது, இருநாடுகளின் உறவு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, ஜனாதிபதி திரௌபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜக்தீப் தங்கர் ஆகியோரை சந்திக்க உள்ளார்.

மேலும், பராகுவே அதிபர் பலாசியோஸ் மும்பை செல்ல உள்ளார். அங்கு, தொழிலதிபர்கள், வர்த்தகர்கள், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், தொழில்முனைவோர்கள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்களை சந்தித்து பேச உள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us