Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/காஷ்மீரில் பள்ளிகளில் தேசிய கீதம் கட்டாயம்: மாநில அரசு உத்தரவு

காஷ்மீரில் பள்ளிகளில் தேசிய கீதம் கட்டாயம்: மாநில அரசு உத்தரவு

காஷ்மீரில் பள்ளிகளில் தேசிய கீதம் கட்டாயம்: மாநில அரசு உத்தரவு

காஷ்மீரில் பள்ளிகளில் தேசிய கீதம் கட்டாயம்: மாநில அரசு உத்தரவு

UPDATED : ஜூன் 14, 2024 06:16 PMADDED : ஜூன் 14, 2024 11:08 AM


Google News
Latest Tamil News
ஸ்ரீநகர்: காஷ்மீரில் தேசிய கீதத்துடன் வகுப்புகளை துவக்க வேண்டும் என அம்மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது.



இது தொடர்பாக காஷ்மீர் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர் அலோக் குமார் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது: சரியான வழிகாட்டுதல்களின்படி பள்ளிகளில் காலை பிரார்த்தனை கூட்டம் தேசிய கீதத்துடன் துவங்க வேண்டும். காலை பிரார்த்தனை கூட்டம் என்பது ஒருமைப்பாடு மற்றும் மன அமைதி ஆகியவற்றை வளர்ப்பதற்கான தளங்களாக செயல்படுகின்றன. காஷ்மீரின் பல பள்ளிகளில் இதுபோன்ற குறிப்பிடத்தக்க பாரம்பரியம் ஒரே மாதிரியாக மேற்கொள்ளவில்லை. இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

மேலும், காலை பிரார்த்தனை கூட்டங்களுக்கு சிறப்பு விருந்தினர்களை அழைத்து சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு மற்றும் போதைப்பொருள் அச்சுறுத்தலுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது





      Our Apps Available On




      Dinamalar

      Follow us