நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் திருத்தம்: அக்டோபரில் துவக்க தேர்தல் கமிஷன் திட்டம்!
நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் திருத்தம்: அக்டோபரில் துவக்க தேர்தல் கமிஷன் திட்டம்!
நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் திருத்தம்: அக்டோபரில் துவக்க தேர்தல் கமிஷன் திட்டம்!

எதிர்ப்பு
பீஹாரில் இந்தாண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கடந்த ஜூன் இறுதியில், வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணியை தேர்தல் கமிஷன் மேற்கொண்டது. இதற்கு, எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
ஆலோசனை
இதனிடையே, நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளை மேற்கொள்ள தேர்தல் கமிஷன் ஆர்வம் காட்டி வருவதாக தெரிகிறது. இது தொடர்பாக நேற்று( செப்.,09)ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் கூடுதல் சிஇஓ( வாக்காளர் பட்டியல் தலைமை அதிகாரி), துணை சிஇஓ மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர் மற்றும் தேர்தல் பணிகளில் ஈடுபடும் அதிகாரிகளுடன் தலைமை சிஇஓ ஆலோசனை நடத்தி உள்ளார். விரைவில் எஸ்ஐஆர் பணிகளை மேற்கொள்வதற்கு தயாராக இருப்பது குறித்தும் பூத் மட்டத்தில் அதிகாரிகள் நியமிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
விரைவில்
மற்றொரு ஆலோசனை கூட்டத்தில் அனைத்து மாநில தலைமை வாக்காளர் பட்டியல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் கமிஷன் ஆலோசனை நடத்தி உள்ளது. அதில், வாக்காளர்களின் எண்ணிக்கை, கடந்த முறை நடந்த திருத்தப் பணிகளின் தகவல்கள் உள்ளிட்டவற்றை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.