Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/எந்தவொரு அரசியலுக்கும் இடமில்லை: நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு எதிரான பதவி நீக்க தீர்மானம் குறித்து கிரண் ரிஜிஜு "பளீச்"

எந்தவொரு அரசியலுக்கும் இடமில்லை: நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு எதிரான பதவி நீக்க தீர்மானம் குறித்து கிரண் ரிஜிஜு "பளீச்"

எந்தவொரு அரசியலுக்கும் இடமில்லை: நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு எதிரான பதவி நீக்க தீர்மானம் குறித்து கிரண் ரிஜிஜு "பளீச்"

எந்தவொரு அரசியலுக்கும் இடமில்லை: நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு எதிரான பதவி நீக்க தீர்மானம் குறித்து கிரண் ரிஜிஜு "பளீச்"

ADDED : ஜூன் 04, 2025 03:51 PM


Google News
Latest Tamil News
புதுடில்லி: 'நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு எதிரான பதவி நீக்கத் தீர்மானம் நீதித்துறையில் உள்ள ஊழல் தொடர்பான விஷயம். இதனால், எந்த ஒரு அரசியலுக்கும் இடமில்லை' என பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.

அலகாபாத் ஐகோர்ட் நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் மூட்டை மூட்டையாக பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து, வரும் ஜூலை 2ம் தேதி நடக்க உள்ள பார்லிமென்ட் கூட்டத் தொடரில், அவரை பதவியில் இருந்து நீக்க தீர்மானத்தை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இது தொடர்பாக பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு எதிரான பதவி நீக்கத் தீர்மானம் நீதித்துறையில் உள்ள ஊழல் தொடர்பான விஷயம். எந்த ஒரு அரசியலுக்கும் இடமில்லைநாங்கள் ஒருமித்த நிலைப்பாட்டை எடுக்க விரும்புகிறோம், இந்த விஷயத்தைப் பற்றி விவாதித்து முடிவெடுக்க பார்லிமென்ட் உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும்.

எனவே, நான் அனைத்து அரசியல் கட்சிகளிடையேயும் ஒருமித்த கருத்தை கேட்டு வருகிறேன், மேலும் முக்கிய தலைவர்களுடன் கலந்துரையாடலைத் தொடங்கியுள்ளேன். இது தொடர்பாக அனைவரையும் சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்துவேன்.

இந்த விஷயம் மிகவும் தீவிரமானது, இது நாட்டிற்கு மிகவும் முக்கியமானது. எனவே, ஊழல் பற்றி நாம் விவாதிக்கும்போது, ​​அது நீதித்துறையில் ஊழலாக இருந்தாலும் சரி அல்லது வேறு எங்காவது நடந்த ஊழலாக இருந்தாலும் சரி, அது நாட்டின் முக்கியமானதாக கருத்தில் கொள்ள வேண்டும். அதில் நாங்கள் ஒரு தரப்பினர் கூறுவதை மட்டும் முக்கியமானதாக கருத்தில் கொள்ள மாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us