
பாலு அளித்த பேட்டி:
மாமல்லபுரத்தில் அன்புமணி தலைமையில், பா.ம.க., பொதுக்குழு கூட்டம் கடந்த ஆகஸ்ட் 9ல் நடந்தது. அதில், 'சட்டசபை தேர்தல் நெருங்குவதால், உட்கட்சி தேர்தல் நடத்தும் சூழல் இல்லை. எனவே, பா.ம.க., தலைவர் அன்புமணி, பொதுச்செயலர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா ஆகியோரின் பதவிக்காலம், வரும் 2026 ஆக., 1 வரை நீட்டிக்கப்படுகிறது' என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அருள் அளித்த பேட்டி:
கடந்த, 48 ஆண்டாக, பா.ம.க.,வை கட்டிக்காத்த இயக்கத்தை, நிறுவனர் ராமதாஸிடம் இருந்து திருட நினைக்கின்றனர். கடந்த ஏப்., 14ல் நடந்த நிர்வாக குழுவில், செயல் தலைவராக அன்புமணி நியமிக்கப்பட்டார். செயல் தலைவராக இருந்து, பொதுக்குழுவை கூட்ட அன்புமணிக்கு அதிகாரம் இல்லை. நிர்வாக குழுவில் நீக்கப்பட்டவர்களுக்கு, பொதுக்குழு, செயற்குழு கூட்ட அதிகாரம் இல்லை என்பதை சுட்டிக்காட்டி, தேர்தல் கமிஷனுக்கு, நிறுவனர் ராமதாஸ் கடிதம் அனுப்பி உள்ளார்.


