Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வக்கீல் சங்க தேர்தல் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு

வக்கீல் சங்க தேர்தல் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு

வக்கீல் சங்க தேர்தல் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு

வக்கீல் சங்க தேர்தல் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு

ADDED : ஜூன் 11, 2024 05:49 AM


Google News
Latest Tamil News
புதுச்சேரி: புதுச்சேரி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வக்கீல்கள் சங்க தேர்தல் நடந்தது.

புதுச்சேரி வக்கீல்கள் சங்க தேர்தல் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. வக்கீல்கள் சங்க நிர்வாகிகள் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து, புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சங்க அலுவலகத்தில் நேற்று நடந்தது.

வாக்கு பதிவு காலை 7:00 மணிக்கு துவங்கி, மாலை 5:00 மணி வரை நடந்தது. அதில், 1,033 வக்கீல்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். அதில், தலைவர் பதவிக்கு அண்ணாதுரை, பாலசுந்தரம், பச்சையப்பன், ரமேஷ், சாய் ராஜகோபால், சுப்பிரமணியன் ஆகிய 6 பேர் போட்டியிடுகின்றனர்.

தேர்தல் நடத்தும் அதிகாரியாக, ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி செந்தில்குமார் பணியாற்றினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us