ADDED : ஜூலை 30, 2024 05:07 AM
புதுச்சேரி: புதுச்சேரி நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் கூட்டு போராட்டக்குழுவின் செயற்குழு கூட்டம் நடந்தது.
அரசு ஊழியர் சம்மேளனம் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, ஆலோசகர் ஆனந்த கணபதி தலைமை தாங்கினார். கன்வீனர்கள், வேளாங்கண்ணிதாசன், கலியபெருமாள், குணசேகரன், ஆனந்தன், பாண்டியன் உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் பென்ஷனை நேரடியாக வழக்க கோரி, புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய பகுதிகளில் தொடர் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
மேலும், பல்வேறு கோரிக் கையை வலியுறுத்தி, வரும் 1ம் தேதி சட்டசபை முன்பு, கவன ஈர்ப்பு போராட்டமும், 6ம் தேதி உள்ளாட்சித்துறை அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டமும், 9ம் தேதி கவர்னர் மாளிகை அருகே தர்ணா போராட்டம் நடத்துவதாக முடிவு செய்யப்பட்டது.