/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மாடியிலிருந்து தவறி விழுந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் பலி மாடியிலிருந்து தவறி விழுந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் பலி
மாடியிலிருந்து தவறி விழுந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் பலி
மாடியிலிருந்து தவறி விழுந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் பலி
மாடியிலிருந்து தவறி விழுந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் பலி
ADDED : ஜூலை 30, 2024 04:58 AM
காரைக்கால்: காரைக்காலில் பூ பரிக்க சென்ற முன்னாள் தலைமை ஆசிரியர் மாடியிலிருந்து தவறி விழுந்து சிகிச்சை பலனின்றி உயிழந்தார்.
காரைக்கால் சின்னக்கண்ணு செட்டி தெருவை சேர்ந்த அருணாச்சலம், 71. ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். இவரது மனைவி பானுமதி இருவரும் தனியாக வசித்து வருகின்றனர். இவர் கடந்த 26ம் தேதி பூப்பறிப்பதற்காக மாடிக்கு சென்றார்.
அப்போது வீட்டின் பின்புறத்தில் பலத்த சத்தம்கேட்டது.
வீட்டில் இருந்தவர்கள் சென்று பார்தபோது அருணாசலம் மாடி படியிலிருந்து விழுந்து தலையில் அடிபட்டு ரத்தம் வெள்ளத்தில் மயங்கி கிடந்தார். உடன் அவரை மீட்டு அரசு பொது மருத்துவமணையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
நேற்று முன்தினம் அருணாச்சலம் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
நகர போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.