புதுச்சேரி: உறுவையாறு புதுநகரைச் சேர்ந்தவர் ராஜலட்சுமி, 45, இவர் பல இடங்களில் கடன் வாங்கியுள்ளார். கடன் கொடுத்தவர்கள் கடனை கேட்டு ராஜலட்சுமி வீட்டிற்கு வந்து உள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை 4:00 மணியளவில் வீட்டில் இருந்து வெளியே சென்ற ராஜலட்சுமி இதுவரை வீடு திரும்பவில்லை. அவரது மொபைல் எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது அண்ணி வள்ளி கொடுத்த புகாரின் பேரில் மங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.