Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கட்டடத்தை இடிக்க சென்ற அதிகாரிகளால் பரபரப்பு

கட்டடத்தை இடிக்க சென்ற அதிகாரிகளால் பரபரப்பு

கட்டடத்தை இடிக்க சென்ற அதிகாரிகளால் பரபரப்பு

கட்டடத்தை இடிக்க சென்ற அதிகாரிகளால் பரபரப்பு

ADDED : ஜூன் 11, 2024 05:45 AM


Google News
புதுச்சேரி: புதுச்சேரியை சேர்ந்தவர் பூமிதேவி, 80; பிரஞ்சு குடியுரிமை பெற்ற இவர் தனது பிள்ளைகளுடன் பிரான்சில் வசித்து வருகிறார். புதுச்சேரி ஏனாம் வெங்கடசலபதி பிள்ளை வீதியில் பூமிதேவிக்கு சொந்தமான காலி மனையில், கடந்த 2021ம் ஆண்டு 3 மாடி வீடு கட்டப்பட்டது. விசாரித்தபோது, வாணரப்பேட்டை சேர்ந்த சங்கரி வீடு கட்டி வருவது தெரிய வந்தது.

இதுதொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் பூமிதேவி வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், பூமிதேவி இடத்தில் கட்டப்பட்டுள்ள 3 மாடி கட்டடத்தை இடித்து அகற்ற உத்தரவிட்டது. புதுச்சேரி நகர அமைப்பு குழுமத்தினர், நேற்று காலை, போலீஸ் பாதுகாப்புடன் கட்டடத்தை இடிக்க சென்றனர்.

அப்போது சங்கரி தரப்பினர் தாங்களே வீட்டை இடித்து இடத்தை ஒப்படைப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து, அதிகாரிகள் புறப்பட்டு சென்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us