Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ 3 சவரன் நகை திருட்டு வீராம்பட்டினத்தில் துணிகரம்

3 சவரன் நகை திருட்டு வீராம்பட்டினத்தில் துணிகரம்

3 சவரன் நகை திருட்டு வீராம்பட்டினத்தில் துணிகரம்

3 சவரன் நகை திருட்டு வீராம்பட்டினத்தில் துணிகரம்

ADDED : அக் 11, 2025 07:00 AM


Google News
அரியாங்குப்பம் : வீடு புகுந்து 3 சவரன் நகை மற்றும் பணம் திருடி சென்ற மர்ம நபரை, போலீசார் தேடி வருகின்றனர்.

வீராம்பட்டினம் சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் முருகன்; மீன் பிடிக்கும் தொழிலாளி.

நேற்று காலை, இவரது மனைவி சரிதா வெளியில் சென்று விட்டு, வீட்டுக்கு வந்தார்.

வீட்டின் பின் பக்க கதவு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

உள்ளே சென்று பார்த்தபோது அலமாரியில் வைத்திருந்த 3 சவரன் நகைகள் மற்றும் 50 ஆயிரம் பணம் காணாமல் போயிருந்தது. அருகில் இருந்தவர்களிடம் விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இது குறித்த புகாரின் பேரில், அரியாங்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து, மர்ம நபரை தேடி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us