Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ போலீஸ் துறையில் 516 பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நமச்சிவாயம்

போலீஸ் துறையில் 516 பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நமச்சிவாயம்

போலீஸ் துறையில் 516 பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நமச்சிவாயம்

போலீஸ் துறையில் 516 பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நமச்சிவாயம்

ADDED : மார் 27, 2025 03:54 AM


Google News
புதுச்சேரி: சட்டசபையில் அமைச்சர் நமச்சிவாயம், போலீஸ் துறை சம்மந்தமான வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு;

மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை பராமரிக்க போலீஸ் துறை அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. அடுத்த நிதியாண்டில், குற்றங்களை தடுக்க ரோந்து பணிகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். பொது மக்கள் குறைகளை தீர்க்க ஒவ்வொரு துணைப்பிரிவு அல்லது பிரிவின் ஒரு காவல் நிலையத்தில் மக்கள் மன்றம் ஒவ்வொரு சனிக்கிழமையும் நடத்தப்படும்.

ரவுடிகளை கண்காணிக்கவும், குற்றங்களை தடுக்கவும் ஆப்ரேஷன் திரிசூல் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை நடத்தப்படும். மிஷன் இளமை திட்டத்தின் கீழ் போதைப் பொருட்களின் தீங்கு விளைவிக்கும் விளைவுகளில் இருந்து இளைஞர்களை திசை திருப்ப விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும். சைபர் குற்றங்கள், போக்குவரத்து குற்றங்கள், போக்சோ விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

பெண் குழந்தைகள் தங்கள் குறைகளை தெரிவிக்க 500 பள்ளிகளில் புகார் பெட்டி வைக்கப்படும். கடலோர காவல்படை மற்றும் உள்ளூர் மீனவர்களுடன் வழக்கமான கடலோர ரோந்து நடத்தப்படும்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் போக்குவரத்து சிக்னல்கள் சி.சி.டி.வி கேமராக்கள், பி.ஏ., அமைப்புகள் போன்றவை நிறுவப்படும். அரசுப்பள்ளிகளில் மாணவர் போலீஸ் கேடட் திட்டம் துவங்கப்படும். போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்த புதுச்சேரியில் ஒரு குழந்தைகள் போக்குவரத்து பூங்கா நிறுவப்படும்.

போலீஸ் துறையில் காலியாக உள்ள 70 சப் இன்ஸ்பெக்டர், 156 போலீசார், 7 ஓட்டுநர், 17 சமையல்காரர், 25 பின்பற்றுபவர், 29 தளம் கையாள்பவர், 12 வானொலி தொழில்நுட்ப வல்லுநர், 200 கடலோர ஊர்காவல் படை பணியிடங்கள் நிரப்பப்படும். இந்திய ரிசர்வ் பட்டாலியன் பிரிவில் 12 சப் இன்ஸ்பெக்டர்கள், 12 போலீஸ் பணிடங்கள் நிரப்பப்படும். இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us