Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ 7 பேரிடம் ரூ. 5.78 லட்சம் 'அபேஸ்' சைபர் கிரைம் கும்பல் கைவரிசை

7 பேரிடம் ரூ. 5.78 லட்சம் 'அபேஸ்' சைபர் கிரைம் கும்பல் கைவரிசை

7 பேரிடம் ரூ. 5.78 லட்சம் 'அபேஸ்' சைபர் கிரைம் கும்பல் கைவரிசை

7 பேரிடம் ரூ. 5.78 லட்சம் 'அபேஸ்' சைபர் கிரைம் கும்பல் கைவரிசை

ADDED : செப் 04, 2025 05:34 AM


Google News
புதுச்சேரி : புதுச்சேரியை சேர்ந்த 7 பேர் சைபர் கிரைம் மோசடி கும்பலிடம் 5.78 லட்சம் ரூபாய் ஏமாந்துள்ளனர்.

வீராம்பட்டினத்தை சேர்ந்த நபரை, டெலிகிராம் மூலம் தொடர்பு கொண்ட மர்மநபர், பகுதி நேர வேலையாக ஆன்லைனில் முதலீடு செய்து அதிக லாபம் பெறலாம் என, ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

அதைநம்பிய அவர் பல்வேறு தவணைகளாக மர்மநபர் தெரிவித்த ஆன்லைன் வர்த்தகத்தில் 1 லட்சத்து 36 ஆயிரத்து 830 ரூபாய் முதலீடு செய்தார். அதன் மூலம் வந்த லாப பணத்தை எடுக்க முயன்றபோது முடியவில்லை. அதன்பிறகே, மோசடி கும்பலிடம் பணத்தை இழந்தது தெரியவந்தது.

இதேபோல், லாஸ்பேட்டையை சேர்ந்தவர் 1 லட்சத்து 27 ஆயிரம், வில்லியனுாரைச் சேர்ந்தவர் 80 ஆயிரம், தட்டாஞ்சாவடியை சேர்ந்தவர் 80 ஆயிரம், லாஸ்பேட்டையை சேர்ந்தவர் 85 ஆயிரம், அரியாங்குப்பத்தை சேர்ந்தவர் 49 ஆயிரத்து 500, கரசூரை சேர்ந்தவர் 20 ஆயிரம் என, 7 பேர் மோசடி கும்பலிடம் 5 லட்சத்து 78 ஆயிரத்து 330 ரூபாய் ஏமாந்துள்ளனர். இதுகுறித்த புகார்களின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us