Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ நெல்லித்தோப்பில் மீண்டும் குடிநீரில் கழிவுநீர் கலப்பு; 3 பேர் கவலைக்கிடம் : 7 பேருக்கு தீவிர சிகிச்சை சீரமைப்பு பணியில் பொதுப்பணித்துறை மும்முரம்

நெல்லித்தோப்பில் மீண்டும் குடிநீரில் கழிவுநீர் கலப்பு; 3 பேர் கவலைக்கிடம் : 7 பேருக்கு தீவிர சிகிச்சை சீரமைப்பு பணியில் பொதுப்பணித்துறை மும்முரம்

நெல்லித்தோப்பில் மீண்டும் குடிநீரில் கழிவுநீர் கலப்பு; 3 பேர் கவலைக்கிடம் : 7 பேருக்கு தீவிர சிகிச்சை சீரமைப்பு பணியில் பொதுப்பணித்துறை மும்முரம்

நெல்லித்தோப்பில் மீண்டும் குடிநீரில் கழிவுநீர் கலப்பு; 3 பேர் கவலைக்கிடம் : 7 பேருக்கு தீவிர சிகிச்சை சீரமைப்பு பணியில் பொதுப்பணித்துறை மும்முரம்

ADDED : செப் 24, 2025 05:50 AM


Google News
Latest Tamil News
புதுச்சேரி: புதுச்சேரியில் மீண்டும் சுகாதாரமற்ற குடிநீரை குடித்த பலர் வயிற்று போக்கால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சீரமைப்பு பணியில் பொதுப்பணித் துறையினர் ஈடுபட்டுள்ளனர். உருளையன்பேட்டை மற்றும் நெல்லித்தோப்பு தொகுதிகளில் கடந்த 7ம் தேதி பலருக்கு வயிற்று போக்கு ஏற்பட்டது. அவர்களில் மூவர், மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் இறந்தனர். பலர், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர்.

அதனைத் தொடர்ந்து, பொதுப்பணித்துறையினர் ஒரு வாரம் மேற்கொண்ட ஆய்வில், முத்தரையர்பாளையத்தில் இருந்து நகரப் பகுதிக்கு வரும் குடிநீர் குழாயில், சக்தி நகர் 8 மற்றும் 9வது குறுக்கு வீதிகளுக்கு செல்லும் குழாய், வாய்க்கால் பகுதியில் உடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் கலப்பதை கடந்த 14ம் தேதி கண்டுபிடித்து சீரமைத்தனர்.

குடிநீரில் கழிவு நீர் கலந்த விவகாரத்தை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தின. பெரும் கலோபரங்களை ஏற்படுத்திய குடிநீரில் கழிவு நீர் கலப்பு விவகாரம் சற்று ஓய்ந்த நிலையில் நேற்று நெல்லித்தோப்பு தொகுதியில் பெரியார் நகர், ராஜய்யா தோட்டம், புது அய்யனார் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 10க்கும் மேற்பட்டடோர் நேற்று வயிற்று போக்கால் பாதித்து அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். அவர்களில், 3 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தகவலறிந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ததில் புது அய்யனார் கோவில் தெரு, தோட்டக்கால் மற்றும் ராஜய்யா தோட்டம் பகுதியில் நகராட்சி சார்பில், கழிவு நீர் கால்வாய் கட்டும் பணிக்காக பள்ளம் தோண்டியபோது, குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் கலந்திருப்பது கண்டுபிடித்து, சீரமைப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும், பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பாதித்தவர்களுக்கு ஓம்சக்தி சேகர் ஆறுதல் வயிற்று போக்கால் பாதித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை அ.தி.மு.க., உரிமை மீட்பு குழு மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர், சந்தித்து ஆறுதல் கூறி விசாரித்தபோது, கடந்த சில தினங்களாக குடிநீர் கலங்களாக வந்தது. அந்த குடிநீரை குடித்ததால் வயிற்று போக்கு ஏற்பட்டதாக கூறினர். தொடர்ந்து, மருத்துவமனையின் உள்ளிருப்பு அதிகாரி ஆத்மநாபனை சந்தித்து, பாதித்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க கேட்டுக் கொண்டார். பின்னர், பொதுப்பணித்துறை அமைச்சரை சந்தித்து, குடிநீரில் கழிவுநீர் கலந்த பகுதியில் ஆய்வு செய்து உடனடியாக சுத்தமான குடிநீர் வழங்கவும், அதுவரை, சக்தி நகரில் வழங்கிய போன்று, பாதித்த பகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சுத்திகரித்த குடிநீர் இலவசமாக வழங்கவும், குடிநீர் சுத்திகரிப்பு மையம் ஒன்று புதிதாக அமைக்க வலியுறுத்தினார்.



ஒருங்கிணைப்பு தேவை

அரசு துறைகளில் ஒருங்கிணைப்பு இல்லாததே குடிநீரில் கழிவு நீர் கலப்பதற்கு முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது. குறிப்பாக, பொதுப்பணித்துறை, நகராட்சி மற்றும் மின்துறையினர் ஒருங்கிணைந்து செயல்பட்டால், குடிநீர் குழாய் உடைப்பு, கழிவு நீர் கால்வாய் அடைப்பு, மின் கேபிள் துண்டிப்பு போன்ற சம்பவங்களை தவிர்க்கலாம். இந்த மூன்று துறையில் ஏதேனும் ஒரு துறை சார்பில் பணி நடந்தாலும், அந்த பகுதியில் பிற இரு துறை அதிகாரிகளும் உடன் இருந்தால், இதுபோன்ற பாதிப்புகளை தவிர்க்கலாம். இதற்கு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us