Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ சமுதாயக்கூடம் அமைக்க கோரிக்கை

சமுதாயக்கூடம் அமைக்க கோரிக்கை

சமுதாயக்கூடம் அமைக்க கோரிக்கை

சமுதாயக்கூடம் அமைக்க கோரிக்கை

ADDED : ஜூன் 29, 2024 10:03 PM


Google News
பவுஞ்சூர்,:பவுஞ்சூர் அருகே அணைக்கட்டு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில், 5,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

அணைக்கட்டு பகுதியில் சமுதாயக்கூடம் வசதி இல்லாததால், செம்பூர், தண்டரை, அணைக்கட்டு, கொஞ்சிக்காடு உள்ளிட்ட கிராமங்களில் வசிப்போர் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

மேலும், தங்களது குடும்பங்களின் நிச்சயதார்த்தம், திருமணம், சீமந்தம், பிறந்தநாள் விழா உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளை நடத்த மண்டபம் தேடி பவுஞ்சூர், கூவத்துார் போன்ற பகுதிகளுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.

பல ஆண்டுகளாக இப்பகுதி மக்கள் சமுதாயக்கூடம் அமைக்க வேண்டுகோள் விடுத்து வரும் நிலையில், தற்போது வரை அமைக்கப்படாமல் உள்ளதால், இப்பகுதி வாசிகள் தனியார் மண்டபத்தில் அதிகம் பணம் செலுத்தி சுப நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, புதிய சமுதாய நலக்கூடம் அமைத்து, ஊராட்சிக்கு வருவாய் ஈட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us