Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ 2 ஆண்டாக சாலை விரிவாக்கம் மந்தம் 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிப்பு

2 ஆண்டாக சாலை விரிவாக்கம் மந்தம் 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிப்பு

2 ஆண்டாக சாலை விரிவாக்கம் மந்தம் 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிப்பு

2 ஆண்டாக சாலை விரிவாக்கம் மந்தம் 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிப்பு

ADDED : ஜூன் 15, 2024 12:28 AM


Google News
Latest Tamil News
மதுராந்தகம்:மதுராந்தகம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், வட்டாட்சியர் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் மற்றும் அய்யனார் கோவில் சந்திப்பு கடந்து, பெரும்பாக்கம் வழியாக உத்திரமேரூர் செல்லும் மாநில நெடுஞ்சாலை உள்ளது.

தேசிய நெடுஞ்சாலையின் எதிர் திசையில் பயணித்து, மதுராந்தகம் டவுன் பகுதி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு, நாள்தோறும் சுற்றியுள்ள 30 கிராமங்களைச் சேர்ந்த நுாற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.

தேசிய நெடுஞ்சாலையையொட்டி, சாலையை விரிவாக்கம் செய்ய, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் நிதி ஒதுக்கீடு செய்து, பணி மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இதில், வட்டாட்சியர் அலுவலகம் அருகே சிறிய பாலம் ஒன்றும், எம்.எல்.ஏ., அலுவலகம் அருகே பெரிய பாலம் ஒன்றும் அமைக்கும் பணி நடந்து முடிந்து உள்ளது.

தற்போது, இரண்டு ஆண்டுகளைக் கடந்தும், ஆமை வேகத்தில் நடைபெறும் சாலை பணி முடிவு பெறாமல், ஜல்லிக்கற்கள் கொட்டிய நிலையிலேயே உள்ளது.

ஜல்லிகற்கள் மீது இருசக்கர வாகனங்களில் செல்லும் பெண்கள் மற்றும் முதியவர்கள், கீழே விழுந்து அடிபடுகின்றனர்.

இதனால், வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை காலங்களில், எதிர் திசையில் சாலையை கடக்கும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்.

எனவே, உயிர் சேதங்களை தவிர்க்கும் பொருட்டு, தேசிய நெடுஞ்சாலைத்துறையினர், கிடப்பில் போடப்பட்டுள்ள சாலைப் பணியை விரைந்து முடிக்க, உரிய துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us