Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ மின் தடை பல்லாவரத்தில் சிரமம்

மின் தடை பல்லாவரத்தில் சிரமம்

மின் தடை பல்லாவரத்தில் சிரமம்

மின் தடை பல்லாவரத்தில் சிரமம்

ADDED : ஜூன் 15, 2024 12:21 AM


Google News
பல்லாவரம்:தாம்பரம் மின் கோட்டத்திற்கு உட்பட்ட, பழைய பல்லாவரம், திருத்தணி நகரில், 3வது தெரு, பாலாறு தெரு, கிருஷ்ணா தெரு, வைகை தெரு ஆகிய பகுதிகளில், சமீபகாலமாக அறிவிக்கப்படாத மின் வெட்டு நடைமுறையில் உள்ளது.

இரவில் 12:00 முதல் 3:00 மணி வரை, ஒரு நாள் விட்டு ஒரு நாள், அரை மணி நேரத்திற்கு மேல் மின் தடை ஏற்படுகிறது.

மின் சாதன பொருட்களும் பழுதாகி விடுகின்றன. மின் வாரிய அதிகாரிகளிடம் கேட்டால், முறையாக பதில் அளிப்பதில்லை.

இப்பிரச்னையில் உயர் அதிகாரிகள் தலையிட்டு, அறிவிக்கப்படாத மின் வெட்டு பிரச்னையை சரிசெய்ய வேண்டும் என, கோரிக்கை எழுந்துஉள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us